பங்குசந்தை ஒன்று தான் முதலீட்டின் வழியா ? பங்கு சந்தையை பார்ப்பதற்கு முன்னால் முதலீட்டின் வகைகளை பார்போம்.


1) சேம நல நிதி (Profident Fund )

இது இருபது வேலையாட்கள் அல்லது அதற்கு மேல் வேலை செய்கிற நிறுவனங்களில் இது கட்டயமகபடுகிறது. அடிப்படை சம்பளம் + பஞ்ச படியில் பன்னிரண்டு சதவிகிதம் சேமிக்க வேண்டும். நிறுவனமும் அதே சதவிகிதத்தில் தங்களுடைய பங்கை கொடுக்கும். மொத்தம் இருபத்தி நாலு சதவிகிதம் சேமிக்கப்படும். இதற்கு கிடைக்கும் வட்டி 9.5 %.

2) வைப்பு தொகை (Fixed Deposit)

மொத்தமாக ஒரு தொகையை ஒரு குறிப்பிட்ட வருடத்திற்கு வங்கிகளில் வைப்பு தொகையாக வைத்திருக்கலாம். 9.5 % லிருந்து 11.5% வரை வெவ்வேறு வங்கிகளில் வெவ்வேறு % வைத்து கொடுக்கிறார்கள். முதியவர்களுக்கு தனி சலுகை உண்டு.

3) Recurring Deposit (RD)

இந்த திட்டத்தில் மாதா மாதம் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். வங்கி மற்றும் தபால் நிலையங்களில் இத்திட்டம் செயல் படுகிறது. கட்டுகின்ற தொகை மற்றும் எத்தனை மாதங்கள் என்பதை பொறுத்து 7 to 11 % வட்டி கிடைக்கும். குறைந்த பட்சம் ரூ 100 லிருந்து எவ்வளவு வேண்டுமானாலும் மாத தவணை கட்டலாம்.


4) நிலங்கள் அல்லது கட்டிடங்கள் (வீடு, வணிகத்துக்காக)

இதை பற்றி அதிகம் சொல்ல தேவை இல்லை. வாங்கவில்லை என்றால் சீக்கிரம் வாங்குங்க சார் / மேடம். வீட்டு வட்டி எல்லாம் குறைந்து இருக்கிறது. வாடகை எல்லாம் ஏறுகிறது.


5) தங்கம்

(எப்படா வரும்ன்னு எதிர்பார்த்துகிட்டு இருக்கேன்னு மேடம் சொல்லுறது கேட்குது) இதுவும் பழைய முதலீட்டு முறைதான். பெண் பெற்றவர்களை அலையாய் அலைகழிக்கும். மாப்பிள்ளை வீட்டாரை பார்த்து பல்லை இளிக்கும். கொஞ்சம் கொஞ்சமாய் வாங்கினால் பளு தெரியாது.

பல்வேறு வங்கிகளின் முகவரி ஒரே இடத்தில். நன்றி welcome NRI


http://www.welcome-nri.com/info/project/IndianBankstext.htm#public

0 comments: